ஒரு முயலின் குளிர்காலம்
அகன்று விரிந்து எங்கும் இயற்கை வளம் கொட்டி கிடந்த அந்த மலையின் உச்சியில் முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் சாம்சன். சாம்சன் முயலானது நல்ல அறிவும் தன்மையான குணமும் கொண்டது. அந்த மலையானது கடல் மட்டத்திலிருந்து 6000 அடிக்கும் மேலாக இருந்தது. அதனால் குளிர் காலத்தில் பனி செய்து உறைந்து போகும். அந்த சமயத்தில் அங்கு வாழும் உயிரினங்களில் சில குளிர் கால உறக்கத்திற்கும், சில தற்காலிகமாக வேறு ஒரு இடத்திற்கு புலம் பெயர்ந்து சென்று விடும். சாம்சன் மற்றும் அதனை சார்ந்த முயல்களும் சற்று தொலைவில் உள்ள புதர்களில் தங்கள் வலைகளை அமைத்து அங்கு வாழ ஆரம்பிக்கும்.
அனால் அங்கு அவர்களுக்கு ஏற்படும் ஒரே பிரச்சினை உணவு தான் எனவே உணவு சேமித்து கொண்டு செல்லலாம் என முடிவெடுத்தன. ஆதலால் அனைத்து முயல்களும் தங்களுக்கு தேவையான உணவை சேகரிக்க தொடங்கின. சாம்சனுக்கு கேரட்டும், நிறைய கொட்டை மற்றும் விதைகளை சேகரிக்க எண்ணி அந்த வேலையை செய்து கொண்டிருந்தது. அந்த முயல் கூட்டத்தில் ஜான் என்ற சோம்பேறி முயல் இருந்தது. அது தன்னுடைய சோம்பல் குணத்தால் உணவை சேமிக்காமல் இருந்து வந்தது அதோடு மட்டுமில்லாமல் தந்திரமாக அடுத்தவர் உணவை திருடி தன் வலையில் வைத்துக் கொண்டது.
சாம்சனின் வலையில் இருந்தும் சில கேரட்டுகளை திருடியது ஜான். தன் வலையில் இருந்து சில கேரட்டுகள் திருடு போயிருப்பதை கண்டுபிடித்து விட்டது சாம்சன். மீண்டும் இது நிகழாமல் இருக்க சில அடையாளங்களை அதன் மேல் ஏற்படுத்தி வைத்தது. மறு நாளே அதன் திட்டம் பலித்தது.சாம்சனின் அடையாளத்துடன் கூடிய ஒரு கேரட்டை ஜான் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து விட்டது. அதனிடம் அதை பற்றி விசாரிக்கும் போது ஜான் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தது. சட்டென்று அதனிடம் இருந்த கேரட்டை பிடுங்கி அதில் இருந்த அடையாளத்தை சுட்டி காட்டியது. சாம்சன் ஜான் திருடியதை கண்டுபிடித்ததும் முயல் கூட்ட தலைவரிடம் சொல்லிவிடுவதாக ஜானை மிரட்டியது அப்படி சொல்லிவிட்டால் அதனை அந்த கூட்டத்திலிருந்து விலக்கி வைத்து விடுவர். இதனைக் கேட்டு பயந்த ஜான் தன்னுடைய தவறை ஒத்துக் கொண்டது. உடனடியாக சாம்சனிடம் மன்னிப்பு கேட்டது.
முதலில் சாம்சன் கோபப்பட்டாலும் அவன் மன்னிப்பு கோரியதும் மனம் மாறி மன்னித்தது, அதோடு மட்டுமில்லாமல் திருடுவது தவறு என்றும் அடுத்தவர் உழைப்பில் வாழ்வது குற்றம் எனவும் அறிவுரை கூறியது. அதன் அறிவுரையால் உள்ளம் திருந்திய ஜான் இனி தான் உழைத்தே உணவை சேமிப்பதாக உறுதி அளித்தது. அவன் திருந்தியதை பார்த்த சாம்சன் மகிழ்ச்சியுடன் தன் வேலையை தொடர்ந்தது.
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
0 Comments: