விழுந்த பிறகே
தவறு செய்த பிறகே
திருந்துகிறோம் !
விபத்து நிகழ்ந்த பிறகே
வருத்தப்படுகிறோம் !
காலம் கடந்த பிறகே
யோசிக்கிறோம் !
தண்ணீர் தீர்ந்த பிறகே
சேமிக்கிறோம் !
பணம் தீர்ந்த பிறகே
சேமிக்கிறோம் !
வயது தீர்ந்த பிறகே
உணர்கிறோம் !
நோய் வந்த பிறகே
கவனிக்கிறோம் !
இடறி விழுந்த பிறகே
நிமிர்கிறோம் !
விழுவதை விட
விழுந்த பின்
எழுவதே சிறப்பு !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
0 Comments: